Tuesday, September 17, 2024

05. Wife - Better Half & the Best Half

SriRamaJayam

05. Wife - Better Half! & the Best Half 

Shakuntala speaks about the role of a wife when Dushyanta was not ready to accept her. Words of Shakuntala as documented by Vyasa in the Mahabharata as follows.

மனைவி என்பவள் கணவனுக்கு 
  • கணவனுக்கு பாதியாக இருப்பவள் 
  • கணவனின் இன்ப துன்பங்களையும், எளிமை பெருமைகளை  ஸமமாக பகிர்ந்து கொள்ளும் ஸகாவாக இருப்பவள் 
  • கணவனுக்கு அறம் பொருள் இன்பம் மூன்றிற்கும் ஆதாரம்  மனைவி, அறத்தை கடைபிடிக்கச் செய்து, அறத்தின் வழி சென்று பொருள் ஈட்டி, அறவழியில் இன்பம் அளிப்பவள் மனைவி
  • கணவனின் மித்ரனாக ஆபத்தில் உதவி செய்பவள்
  • கணவனின் யாக யஃஞங்களை கூட இருந்து நடத்தித் தருபவள் 
  • கணவனின் இல்லறத்திற்கு துணையாக அவனை கிருஹஸ்தனாக ஆக்குபவள் 
  • கணவனின் ஆனந்தத்திற்கு காரணமாக இருப்பவள் 
  • கணவனை இவ்வுலக அவ்வுலக செல்வங்களை பெறச் செய்பவள் 
ஆறு குணங்கள் கொண்டவளாம் மனைவி 

कार्येषु दासी, करणेषु मंत्री, रूपेषु लक्ष्मी , क्षमया धरित्री, स्नेहेच  माता, शयनेतु वेश्या:
பொறுமையிலே பூமகளாய், பேரழகில் திருமகளாய், பசியில் அமுதளிக்கும் அன்னையாய், காதல் அரவணைப்பில் கணிகையுமாய்,, ஊழியத்தில் பணிப்பெண்னாய், அறிவினை உரைப்பதிலே அமைச்சனாய் வாழ்கின்ற பெண் எவளோ அவளே வளமான குல மகளாம். 

Another version,
कार्येषु मन्त्री करणेषु दासी भोज्येषु माता शयनेषु रम्भा। 
धर्मानुकूला क्षमया धरित्री भार्या च षाड्गुण्यवतीह दुर्लभा॥

A wife who is like a minister in counsel, like a servant in duties, like a mother in providing food, like Rambha (a celestial nymph) in bed, follows dharma, and is forgiving like the Earth — such a wife with these six qualities is rare to find.


धारा: 
மனைவியை ஸம்ஸ்க்ருதத்தில்  பன்மையில் धारा: அதாவது ஒரு மனைவியை மனைவிகள் என்று கூறுகிறோம். பல ரூபத்தில் கணவனுக்கு துணை நிற்பதால் அவள் பன்மையில் கூறப்படுகிறாள்.  
  • இதே வழுக்கு தாயாரை ஸ்ரீதேவிகள், பூதேவிகள் என்றும் ஆசார்யன் பத்தினியை தேவிகள் என்று அழைக்கும் வழக்கு உள்ளது. 
  • ஆண்டாளும் திருப்பாவையில் மாமான் மகளே என்று மாமனை ஒருமையில் கூறி, மாமியை மாமீர் அவளை எழுப்பீரோ! என்று மாமியை பன்மையில் பாடியுள்ளாள்.
जाया
மனைவிக்கு ஸம்ஸ்க்ருதத்தில் ஜாயா जाया என்று பெயர். கணவன் மற்றோரு வடிவம் எடுத்து மனைவியின் குழந்தையாக பிறப்பதினால். கணவனுக்கு மறு பிறவி தந்தவள் மனைவி என்பதால் ஜாயா - ஜாயதே புன: -  जायते पुन: அதனால் தான் தாயிக்கு பின் தாரம் என்று மனைவியை அன்னையின் ஸ்தானத்தில் போற்றுகிறோம். 

SarvamSriKrishnarpanam

No comments:

Post a Comment